Posts

MSO IQ

https://drive.google.com/file/d/1l6dFzY6YY-YViLHnruUDxmO4PlWsrl_s/view?usp=drivesdk https://drive.google.com/file/d/1lirSleVbeKC9xUucEB2Wm8V9DIciGCr5/view?usp=drivesdk

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் (நேரலை)

Image
 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் (நேரலை) Pic - The Sri Lanka 

இவ்வாறு நடந்தால் கம்பஹா மாவட்டத்தில் NPP - 11, சிலிண்டர் - 03, SJB - ? (முழு விபரம் புள்ளிவிவரங்களுடன்)

Image
Pic - ResearchGate (கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்) நாட்டில் அதிக வாக்காளர்களையும் அதிக பாராளுமன்ற‌ ஆசனங்களையும் கொண்ட எமது கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும்? யாருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் பதிவுகளை சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது.  முதலில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை சற்று ஆராய்வோம். 1,881,129 பதிவு செய்யப்பட்ட கம்பஹா மாவட்டத்தில் 1,487,770 (79.09%) வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. எனினும் அவற்றில் 29,381 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததனால் செல்லுபடியான வாக்குகள் 1,458,389 ஆகும்.  பொதுவாக ஜனாதிபதி தேர்தலை விட அதனை தொடர்ந்து வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும். முன்னைய தேர்தல்கள் தொடர்பான புள்ளி விபரங்களில் அதனை அவதானிக்கலாம். எனினும் இக்கட்டுரையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதேபோன்று இப் பொதுத்தேர்தலிலும் அளிக்கப்பட்டால் 19 ஆசனங்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் எந்தெந்த கட்சி எத்தனை ஆசனங்களை பெறும் என்று ஆராய்வோம். தற்போது அமு...

ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு செய்த செலவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வழங்கிய பதில்!

Image
 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் செய்த பிரச்சார செலவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சுரங்கம் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியரினால் அனுப்பப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு ஆணைக்குழு பதிலளித்துள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 24.10.2024 அன்று குறித்த விபரங்களை மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  குறித்த தினத்தில் தேர்தல் ஆணைக்குழுவுவின் பிரதான அலுவலகம் அல்லது மாவட்ட‌‌ அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. Update :  கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரச்சார செலவுகள் தொடர்பான முழு விபரம் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தில் வெளியிடப்பட்டது. இணைப்பு : https://elections.gov.lk/Pages/PRE_2024_Candidate_Expenditure.html  

ஜனாதிபதித் தேர்தல் 2024 - முடிவுகள் (நேரலை)

Image
 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் - 2024

எந்தவொரு வேட்பாளரும் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார்? தேர்தல் ஆணைக்குழு எமக்கு வழங்கிய பதில்

Image
  Pic - Onlanka நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும், அளிக்கப்படும் வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை அதாவது குறைந்தது 50 வீதம் + 1 என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளாவிட்டால் எவ்வாறு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்ற கேள்வியினை நாம் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் விண்ணப்பம் ஊடாக கேட்டிருந்தோம்.  அதற்கு தேர்தல் ஆணைக்குழு பின்வருமாறு பதிலளித்திருந்தது. "மேற்படி விடயம் தொடர்பில் 1981 இலக்கம் 15 ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஏற்பாட்டின் 56 தொடக்கம் 63 வரையான பகுதிகளில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனினும் குறித்த விடயமானது சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ளது. Link -  https://elections.gov.lk/ta/elections/election_types_pre_T.html   அதனை விரிவாக உதாரணங்களுடன் வாசகர்களுக்கு இலகுவாக தெளிவுபடுத்துவதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.ரினோஸினால் அண்மையில் எழுதப்பட்ட கட்டுரையை இத்துடன் இணைக்கிறோம். 

நீதிமன்ற உரைபெயர்ப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார் கஹட்டோவிட்டவை சேர்ந்த ரிபா

Image
 (கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்) கஹட்டோவிட்டவை சேர்ந்த எம்.ஆர்.எப்.ரிபா LLB (Hons), Attorney at Law அண்மையில் நீதிமன்ற உரைபெயர்ப்பாளராக நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதி பிரிவில் கடமைகளை பொறுப்பேற்றார். M.H.M.ரிபாய் மற்றும் பௌஸுல் கரீமா ஆகியோரின் புதல்வியான இவர் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில்  சட்டபீடத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை இவர் பெற்றிருந்தார். குறித்த பரீட்சை 2021 இல் நடைபெற்ற போதும் இரு வருடங்களாக பெறுபேறுகள் வெளியாகியிருக்கவில்லை. அதனை தொடர்ந்து குறித்த பரீட்சைக்கு தோற்றிய இச்செய்தியை எழுதும் ஊடகவியலாளரினால் அது தொடர்பில் விளக்கம் கோரி நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு  தகவல் அறியும் விண்ணப்பம் (RTI) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் உரிய காலப்பகுதியில் பதில் கிடைக்காமையினால் குறித்த ஊடகவியலாளரால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்...