Posts

Showing posts from February, 2024

"பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பழீல் மௌலானா"

Image
பாலஸ்தீன ஆதரவுப் போராளி ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா... உலக வரலாற்றில் மிக நீண்ட கால பிரச்சனையாகவும் மிக சிக்கலான பிரச்சினையாகவும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை விளங்கி வருகிறது. உலக நாடுகளில் வாழும் முஸ்லிம் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதனைக் காணலாம். இலங்கையிலும் முஸ்லிம்கள் மத்தியில் இன்றைய காலப் பகுதிகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்படுவதை காணலாம். ஆனால்  ஆரம்ப காலங்களில் அதாவது 1940 களின் பிற்பகுதியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு  தெரிவித்து  பாரிய அளவிலானா கூட்டங்கள் , பல சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றது. இதில் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களின் சேவைகள் அளப்பரியது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டதால் பழீல் மௌலானா அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள். அந்த வகையில் பலஸ்தீன் ஆதரவுப் போராளியாக ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களின் பங்களிப்பினை நோக்கும் போது    இலங்கையில் கிலாபத் இயக்கத்தை கலாநிதி ரீ.பி. ஜாயாவே முன்னெடுத்த காலப்பகுதிகளில் கிலாபத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக தனது ஆதரவாளர்களின் துணையுடன் அக்காலத்தில் பல கூட்டங்களை ...

கஹட்டோவிட்ட மற்றும் குரவலான கிராமங்களில் வசிக்கும் 40 வீதமான குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவு! அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்

Image
(ரிஹ்மி ஹக்கீம்) கஹட்டோவிட்ட மற்றும் கஹட்டோவிட்ட மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய கஹட்டோவிட்ட கிராமத்திலுள்ள 796 குடும்பங்களில் 322 (40.45%)  குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 6,000 விட குறைவு என்று அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 443 குடும்பங்கள் வசிக்கும் குரவலான பிரதேசத்தில் 178 குடும்பங்களின் (40.18%) மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவாகும் என்றும் அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில கிராமங்களை தெரிவு செய்து அவற்றில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் தொடர்பிலான தகவல்களை கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right To Information - RTI) கீழ் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு எம்மால் அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கு கிடைத்த பதிலில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. நாம் தகவல் கோரிய கிராமங்கள் : திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, ருக்கஹவில, ஹொரகொல்ல, வல்கம்முல்ல மற்றும் குரவலான   எமது விண்ணப்பத்தில் குறித்த கிராமங்களின் சன...