"பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பழீல் மௌலானா"

பாலஸ்தீன ஆதரவுப் போராளி ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா... உலக வரலாற்றில் மிக நீண்ட கால பிரச்சனையாகவும் மிக சிக்கலான பிரச்சினையாகவும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை விளங்கி வருகிறது. உலக நாடுகளில் வாழும் முஸ்லிம் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதனைக் காணலாம். இலங்கையிலும் முஸ்லிம்கள் மத்தியில் இன்றைய காலப் பகுதிகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்படுவதை காணலாம். ஆனால் ஆரம்ப காலங்களில் அதாவது 1940 களின் பிற்பகுதியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரிய அளவிலானா கூட்டங்கள் , பல சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றது. இதில் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களின் சேவைகள் அளப்பரியது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டதால் பழீல் மௌலானா அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள். அந்த வகையில் பலஸ்தீன் ஆதரவுப் போராளியாக ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களின் பங்களிப்பினை நோக்கும் போது இலங்கையில் கிலாபத் இயக்கத்தை கலாநிதி ரீ.பி. ஜாயாவே முன்னெடுத்த காலப்பகுதிகளில் கிலாபத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக தனது ஆதரவாளர்களின் துணையுடன் அக்காலத்தில் பல கூட்டங்களை ...