தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் கிடைத்த பலன் ; இரு வருடங்களுக்கு பிறகு போட்டிப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்ட நீதிச்சேவை ஆணைக்குழு

- ரிஹ்மி ஹக்கீம் - கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சையானது கொழும்பில் மாத்திரமே நடைபெற்றது. 2021 இல் நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் போது நடைபெற்ற இப்பரீட்சையில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்கள் உட்பட கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பிரதேசங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் தோற்றினார்கள். பரீட்சார்த்திகள் பலர் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் வந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, விசேட வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் சென்று ஐந்து மணி நேர பரீட்சையை பரீட்சார்த்திகள் எழுதியிருந்தனர். இவ்வாறு பரீட்சை 2021 இல் நடைபெற்ற போதும் நீண்ட நாட்களாக பெறுபேறுகள் வெளிவராததால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாம் நீதிச்சேவை ஆணைக்குழுவை தொடர்பு கொண்ட போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை ...